sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலில் குளித்த வாலிபர் மாயம்

/

கடலில் குளித்த வாலிபர் மாயம்

கடலில் குளித்த வாலிபர் மாயம்

கடலில் குளித்த வாலிபர் மாயம்


ADDED : பிப் 08, 2025 07:05 AM

Google News

ADDED : பிப் 08, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நடாக மாநிலம், பெங்களுரூ ஜே.பி., நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகன் ஹரிகிருஷ்ணன், 26; பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் நண்பர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியவர்கள், நேற்று மாலை அப்பகுதி கடலில் குளித்தனர்.

அப்போது ராட்சத அலையில், ஹரிகிருஷ்ணன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடன், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார், ஹரிகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us