sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாளையங்கோட்டை கீழ்பாதி புத்தேரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரிக்கை

/

பாளையங்கோட்டை கீழ்பாதி புத்தேரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரிக்கை

பாளையங்கோட்டை கீழ்பாதி புத்தேரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரிக்கை

பாளையங்கோட்டை கீழ்பாதி புத்தேரி கரையை பலப்படுத்த ஊராட்சி தலைவர் கோரிக்கை


ADDED : ஜன 20, 2024 06:16 AM

Google News

ADDED : ஜன 20, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டை கீழ்பாதியில் 250 ஏக்கர் பரப்பளவில் புத்தேரி கரையை பலப்படுத்தி அதன் பாசன வாய்க்கால்களை அளவீடு செய்து துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி ஊராட்சி எல்லைக்குட்பட்ட புத்தேரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த ஏரிக்கான நீர்வரத்து ஆண்டிமடம், பலாந்துறை அணைக்கட்டிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி மாமங்கலம், கொண்டசமுத்திரம், சோழத்தரம், அகரசோழத்தரம், திம்மசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 2 ,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று சம்பா, குறுவை சாகுபடிகள் நடக்கிறது.

விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் கண்காணிப்பில் ஏரி இருந்து வருகிறது.

ஏரி துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமதள பரப்பாக மண்துார்ந்த இருந்த புத்தேரியில் அரசு அனுமதியுடன் வி.கே.டி., சாலைக்கு மண் எடுத்துள்ளனர்.

இதனால் ஏரியில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்க ஏதுவாக உள்ள நிலையில் 3 கிலோ மீட்டர் துாரம் கொண்டுள்ள ஏரியின் கரை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.இந்த ஏரியிலிருந்து மொத்தம் 5 பாசன வாய்க்கால்கள் கடந்த காலங்களில் இருந்த நிலையில் வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

தண்ணீர் திறந்து வைக்கும் மதகுகள் மட்மே உள்ள நிலையில் வாய்க்கால்கள் அனைத்தும் காணாமல் போனது.இங்குள்ள விவசாய நிலங்களுக்கு ஏரிக்கரையில் வாகனங்களை கொண்டு சென்று அறுவடை செய்யும் நிலை உள்ளது.

சேதமடைந்த கரையால் 2 ,500 ஏக்கர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏரிக்கரையை அகலப்படுத்தியும் பாசனத்திற்கு செல்லும் வாய்க்கால்களை அளவீடு செய்து துார்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

எனவே கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் புத்தேரியை நேரடி ஆய்வு செய்து மாவட்டத்தில் அதிக நீர்பிடிப்பு ஏரியின் கரையை பலப்படுத்த நடவடிக்கை வேண்டும் என கீழ்பாதி ஊராட்சித் தலைவர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us