ADDED : மார் 18, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்து குடித்து சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சேகர், 55. இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த சேகர் கடந்த 15ம் தேதி இரவு பூச்சி மருந்து குடித்தார்.
புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

