/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பைக் வாங்கி தர மறுப்பு வாலிபர் தற்கொலை
/
பைக் வாங்கி தர மறுப்பு வாலிபர் தற்கொலை
ADDED : மார் 05, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தந்தை பைக் வாங்கித் தராததால் எலி பேஸ்ட் சாப்பிட்ட மகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் புவனேஸ்வரன்,20; பி.காம்., வரை படித்துள்ளார். இவர் தனது தந்தையிடம் பைக் வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு அவர் மூன்று மாதம் கழித்து வாங்கித் தருவதாக கூறினார்.
அதில் மனமுடைந்த புவனேஸ்வரன் கடந்த 25ம் தேதி, எலி பேஸ்ட் சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், அவரை குடும்பத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

