/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு
/
மொபட்டில் வைத்திருந்த ரூ.3.43 லட்சம் திருட்டு
ADDED : செப் 24, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மொபட்டில் வைத்திருந்த 3.43 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்தவர் நாகப்பன், 55; மீனவர். இவர் நேற்று மதியம் 1:00 மணியளவில், மொபட் டிக்கியில் 3 லட்சத்து 43 ஆயிரம் வைத்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வங்கிக்கு சென்றார். பின், திரும்பிவந்து பார்த்தபோது, மொபட் டிக்கியை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.