sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உக்ரைனுக்கு எதிரான போரில் தமிழக மாணவர் ரஷ்யாவில் படிக்க சென்ற போது சிக்கிய பரிதாபம்

/

உக்ரைனுக்கு எதிரான போரில் தமிழக மாணவர் ரஷ்யாவில் படிக்க சென்ற போது சிக்கிய பரிதாபம்

உக்ரைனுக்கு எதிரான போரில் தமிழக மாணவர் ரஷ்யாவில் படிக்க சென்ற போது சிக்கிய பரிதாபம்

உக்ரைனுக்கு எதிரான போரில் தமிழக மாணவர் ரஷ்யாவில் படிக்க சென்ற போது சிக்கிய பரிதாபம்


ADDED : ஆக 20, 2025 02:49 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு,:ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற சேத்தியாத்தோப்பு மாணவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைசேர்ந்தவர் சரவணன் மகன் கிேஷார், 23; கடந்த 2021ம் ஆண்டு மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். கிேஷார் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்தபோது, செலவுக்கு பணம் தேவைப் பட்டதால் பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம்பார்சல் பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் கிேஷார் ஈடுபட்டார்.

அப்போது, தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ததாக அவரை ரஷ்யா போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதையறிந்த பெற்றோர், மகனை ஜாமினில் எடுக்க கடலுார் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்திய துாதரகம் மூலமாக ரஷ்ய துாதரகத்தை அணுகினர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஷ்யா போலீசார் வலுக் கட்டாயமாக ராணுவ தளத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்பதாக கிேஷார் வீடியோ அனுப்பினார்.

மகனை மீட்டுத் தரக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கவலையுடன் உள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை கிேஷார் வேறொருவரின் மொபைல் மூலமாக தனது பெற்றோரருக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

தங்களது மகன் மீது பொய் வழக்கு பதிந்து ரஷ்யா போலீசார் கைது செய்துள்ளனர்.

மகனை மீட்க முடியாமல் தவிக்கிறோம். கிேஷாரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததது கவலை அளிப்பதாக பெற்றோர் நேற்று கூறினர்.






      Dinamalar
      Follow us