sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,க்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் புகழாரம்.

/

என்.எல்.சி.,க்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் புகழாரம்.

என்.எல்.சி.,க்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் புகழாரம்.

என்.எல்.சி.,க்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் புகழாரம்.


ADDED : ஜூலை 10, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனம், அறிவுசார் மேம்பாட்டை வளர்க்கும் நோக்கில் புத்தகக் கண்காட்சியை நடத்துவது பாராட்டக்குரியது, மத்திய நிலக்கரி அமைச்சக துணைப் பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால் பேசினார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11 ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில், புத்தகக் கண்காட்சியின் 5ம் நாள் நிகழ்ச்சியில் என்.எல்.சி., நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா தலைமை தாங்கி பேசுகையில், 'புத்தகங்கள் ஒருவரை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்து செல்கின்றன. சரியான நேரத்தில் சரியான புத்தகம் படிப்பது வாழ்வில் முன்னேற்றம் அடைய உதவும். புத்தகக் கண்காட்சிகள் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறிய உதவுகின்றன' என்றார்.

முதன்மை விருந்தினர்களாக மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம செயலர் மாத்ரி பிரசாத், டில்லி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் துணைத் தலைவர் கவுதம் சிக்கர்மனே பங்கேற்றனர்.

ரின்னோஸா கிருஷ்ணகுமார் பாராட்டு பெறும் எழுத்தாளராகவும், கீழைக்காற்று பதிப்பகம் பாராட்டு பெறும் பதிப்பாளராகவும் கௌரவிக்கப்பட்டனர். மேலும், பல்லவி குமார் எழுதிய 'இருசம்மா' என்ற நுால் ரத்தின புகழேந்தி எழுதிய 'சம்பூர்ண ராமாயணம்' என்ற நுாலும் வெளியிடப்பட்டன.

மத்திய நிலக்கரி அமைச்சக நிலக்கரி கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சந்தோஷ் அகர்வால் பேசுகையில், 'என்.எல்.சி., இந்தியா நிறுவனம் அறிவுசார் மேம்பாட்டையும், சிந்திக்கும் சமுதாயத்தையும் வளர்க்கும் நோக்கில் புத்தக கண்காட்சியை நடத்துவது பாராட்டுக்குரியது. இது ஒரு வளமான அனுபவமாகும்' என்றார்.

கண்காட்சியில் அரங்கு எண் 36ல் நன்மொழி பதிப்பகம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களுக்கான புத்தகங்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

புட் நோட் ; நெய்வேலி புத்தக்கண்காட்சியில் முனைவர் ரத்தின புகழேந்தி எழுதிய சம்பூர்ண ராமாயணம் என்ற நுாலை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் துணை பொது இயக்குநர் சந்தோஷ் அகர்வால் வெளியிட்டார். அருகில் என்.எல்.சி.,நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா மற்றும் புதுச்சேரி ஆசிரமத்தின் செயலர் மாத்ரி பிரசாத்.






      Dinamalar
      Follow us