/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி
/
மணவாள மாமுனிகளுக்கு 18ம் தேதி தீர்த்தவாரி
ADDED : ஜன 14, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் சுவாமிக்கு ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
இதனை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகிறது. 8:00 மணிக்கு மருதாடு கிராமத்தில் ஊர் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 10:30 மணிக்கு மருதாடு பெண்ணையாற்றங்கரையில் சுவாமிக்கு திருமஞ்சனம், 11:30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. 12:00 மணிக்கு சாற்றுமறை, மதியம் 1:00 மணிக்கு சுவாமி கோவிலுக்கு மீண்டும் புறப்பாடாகி மாலை 4:30 மணிக்கு கோவிலை வந்தடைகிறது. ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார் பாலாஜி செய்து வருகிறார்.

