sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சப் டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் இல்லை

/

கடலுார் சப் டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் இல்லை

கடலுார் சப் டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் இல்லை

கடலுார் சப் டிவிஷனில் இன்ஸ்பெக்டர்கள் இல்லை


ADDED : நவ 06, 2024 07:13 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தின் தலைநகரான கடலுார் சப் டிவிஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீஸ் நிலையங்களும், கடலுார் துறைமுகம், தேவனாம்பட்டிணம், துாக்கணாம்பாக்கம் ஆகிய சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்களும் உள்ளன. இவற்றில் மாவட்டத்தில் உள்ள முக்கிய அறப் போராட்டங்கள், சாலைமறியல், அரசு ஊழியர் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்கள் அடிக்கடி நடப்பது வழக்கம்.

அப்போது, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் தான் சம்பவ இடத்திற்கு வந்து சாதுார்யமாக பேச்சுவார்த்தை நடத்தியும், இல்லையென்றால் நடவடிக்கை எடுத்தும் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவது வழக்கம்.

ஆனால் கடலுார் புதுநகர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி கடந்த 6 மாதமாக உடல்நல குறைவால் ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு பதிலாக மற்றொருவரை இதுவரை நியமிக்கவில்லை. அதேப்போல கடலுார் முதுநகர் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. மிகவும் சென்சிடிவ் பகுதியில் உள்ள இவ்விரு போலீஸ் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருப்பது வியப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us