/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை கொள்ளை
ADDED : ஜன 14, 2024 03:42 AM
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் மணலூர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் அறிவழகன், 75. ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர். இவர் கடந்த 10ம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது மருமகன் அருள்மணி வீட்டிற்கு துாங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 800 மி.கி., வைர மோதிரம், 350 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

