
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் கம்பர் தெருவில் உள்ள ஆதி பரமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் கம்பர் தெருவில், ஆதி மாரியம்மன் சமேத ஆதி பரமேஸ்வரர் கோவிலில் காரடையான் நோம்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதையொட்டி, காலை 7:30 மணியளவில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மேல் நடந்த சுமங்கலி பூஜையில் 108 பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
பக்தர்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது.

