ADDED : ஆக 23, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.
உதவி தலைமையாசிரியர் விக்டர் தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ஆறுமுகம், வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டது.
ஆசிரியர்கள் பிரேம்குமார், கலியமூர்த்தி போட்டிகளை நடத்தினர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் கலியமூர்த்தி, வாசுகி, பிரேம்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.