ADDED : ஆக 11, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே பள்ளி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட் டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகள் வந்தனா, 14; இவர் அதே பகுதியில் உ ள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி வழக்கம் போல் வந்தனா பள்ளிக்கு சென் றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கரவடிவேல் மகன்கள் தினேஷ், குணசீலன், 17 வயது மகன் ஆகியோர் வந்தனாவை வழிமறித்து கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து 17 வயது மகன், குணசீலன், 23; ஆகியோரை கைது செய்து, தினேைஷ தேடி வருகின்றனர்.