ADDED : ஜூன் 24, 2026 01:20 AM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேட்டை சேர்ந்தவர்கள் சுரேஷ், 40; மாயவேல், 45;
இவர்கள் மீது குறவன்மேட்டை சேர்ந்த பாலை யா மகன் விக்னேஷ், 25; தட்சிணாமூர்த்தி மகன்கள் குகன், 26; சுகன், 23; பாலையா மகன் அபினேஷ், 22; ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக, கத்தியால் வெட்டியதில் சுரேஷ் உயிரிழந்தார்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார், நால்வர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்றச்செயலை தடுக்கும் வகையில், கடலுார் எஸ்.பி. விவேகானந்த சுக்லா பரிந்துரையில், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், விக்னேஷ், சுகன், குகன், மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
