/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : பிப் 09, 2026 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமைலான போலீசார் நேற்று மோகம்பரிகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டி.என்.51.ஜெ.3234 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இது குறித்து, ஆலடி போலீசார் வழக்கு பதிந்து, கொக்காம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்ராஜா, 36; என்பவரை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

