ADDED : டிச 09, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கூழாங்கல் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ஜீவா தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொன்னேரி புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.
அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.