/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமுறை பண்ணிசை விழா
/
வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமுறை பண்ணிசை விழா
ADDED : செப் 22, 2024 02:20 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் உலக அமைதி தின நாள் முன்னிட்டு, திருமுறை பண்ணிசை விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக அமைதி தின நாள் முன்னிட்டு சைவ சித்தாந்த சபை அமெரிக்கா ஒதுவாமூர்த்திகள் நலசங்கம் மற்றும் வட அமெரிக்கா பன்னிரு திருமுறை கழகம் சார்பில் திருமுறை பண்ணிசை விழா நேற்று நடந்தது.
மதுரை ஓதுவாமூர்த்தி பொன் முத்துகுமரன் தலைமையில், நலம் தரும் நற்றமிழ் திருபதிகங்கள் தலைப்பில் பேசினர். மேலும், மயிலாடுதுறை ஓதுவார் சிவக்குமார், மயிலாப்பூர் ஓதுவார் சற்குருநாதன், காஞ்சிபுரம் ஓதுவார் சிவராஜபதி, கரூர் ஓதுவார் குமாரசாமிநாததேசிகர் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருமுறை நிகழ்ச்சி நடந்தது.