sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் மாவட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

/

கடலுார் மாவட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

கடலுார் மாவட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

கடலுார் மாவட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


ADDED : ஏப் 02, 2025 06:28 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக கனரக லாரிகளுக்கு அதிக பட்சமாக 30 ரூபாயும், கார் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு 5 ரூபாயும் உயர்ந்துள்ளது.

வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க வரி கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அந்த வகையில்,நேற்று (ஏப்.,1ம் தேதி) முதல் சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 2 இடங்களில் வரி செலுத்தும் சுங்கச்சாவடிகள் உள்ளன. சிதம்பரம் சாலையில் கொத்தட்டை என்ற இடத்திலும், விருத்தாசலம் சாலையில் பென்னாலகரம் என்ற இடத்திலேயேயும் சுங்கச்சாவடிகள் உள்ளன.

கொத்தட்டையில் ஏற்கனவே கார், ஜீப் ஆகிய இலகு ரக வாகனங்கள் செல்ல 125 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேப் போல இலகுரக வணிக வாகனங்கள் 200 ரூபாயில் இருந்து 210 ரூபாயாகவும், 2 அச்சுகள் கொண்ட வாகனம் 425 ரூபாயில் இருந்து 440ம், 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனம் 460 ரூபாயில் இருந்து 480, பல அச்சுகள் கொண்ட கட்டுமான வாகனங்கள் 665 ரூபாயில் இருந்து 685, ஏழு அச்சுகள் கொண்ட வாகனம் 805 ரூபாயில் இருந்து 835 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொன்னலகரம் டோல்கேட


இங்கு 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கார், ஜீப், இலகு ரக வாகனங்களுக்கு 70 ரூபாயில் இருந்து 75, இலகுரக வணிக வாகன வகை மினி பஸ்சிற்கு 115 ரூபாயில் இருந்து 120, இரண்டு அச்சுகள் கொண்ட பஸ், டிரக்கிற்கு 245 முதல், 250, மூன்று அச்சு கொண்ட வாகனங்களுக்கு 265 முதல், 275, பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 380 முதல் 395, அதிகளவு கொண்ட வாகனம் (7 க்கும் மேற்பட்ட அச்சு) 465 முதல் 480 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளுர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் 340 லிருந்து 350 ஆக உயர்ந்துள்ளது.

4 டோல்கேட்களில் கட்டண உயர்வு இல்லை


விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை , கள்ளக்குறிச்சி, மொரட்டாண்டி பகுதிகளில் உள்ள டோல்கேட்களில் கடந்த செப்டம்பர் மாதம் கட்டணத்தை உயர்த்தியதால், தற்போது இந்த டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.






      Dinamalar
      Follow us