/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
/
டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
ADDED : பிப் 16, 2026 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சோலைகவுன்பாளையம் தோப்பு தெருவை சேர்ந்தவர் சங்கர்,51; இவர், வடுகப்பாளையம் பகுதியில் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார்.
திரத்துறையூர் ஆற்றுபகுதியை சேர்ந்த ஜெயராஜ்,27; என்பவர் சூளை பயன்பாட்டிற்காக டிராக்டர் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்தார். அவர் வரும் பாதையில் நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் டிராக்ரை மேலே துாக்கி காயமடைந்த டிராக்டர் டிரைவர் ஜெயராஜை மீட்டனர். அவர் அடுத்த சில நிமிடங்களில் இறந்தார். பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

