ADDED : ஜன 20, 2025 11:53 PM

சிதம்பரம்; சிதம்பரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிதம்பரம் போக்குவரத்து காவல் துறை மற்றும் விஜய் டி.வி.எஸ்., சார்பில், சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில், வாகன ஓட்டிகளுக்கு ெஹல்மெட் போட்டி வாகனம் ஓட்டுவதின் அவசியம் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்டடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, பள்ளியில் அண்ணாமலை ராணி சீதையாச்சி பள்ளி பிளஸ்2 மாணவர்கள், பாதுகாப்பாக வாகனம் இயக்குவது குறித்து வழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன், அன்புராஜ் மற்றும் டி.வி.எஸ்., மேலாளர் விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.