UPDATED : ஜூலை 14, 2026 05:55 PM
ADDED : ஜூலை 14, 2026 05:52 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம், பெரியார்நகர் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் தாலுகாவில் உள்ள கிராமப்பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.
பயிற்சியை, தாசில்தார் முருகன் தலைமை தாங்கி, துவங்கி வைத்தார்.
தேர்தல் துணை தாசில்தார் சாருலதா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கணக்கெடுப்பு பணியில் மொத்தம், 398 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். நாளை வரை மூன்று நாட்கள் 200 ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்பின், 198 ஆசிரியர்களுக்கு அடுத்த மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
