/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி
ADDED : டிச 28, 2024 05:23 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
தொழில்நுட்ப வல்லுனர் முனைவர் ஜெயகுமார் பயிற்சியை நடத்தினார். இதில், காளான் வகைகள், காளான் வளர்க்கும் முறை, காளான் படுக்கை, காளானில் மதிப்பூட்டப்படும் பொருட்கள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
காளான் வளர்ப்பில் ஈடுபடும் கவுரி தனது வெற்றி பயணம் குறித்து விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டார்.மேலும் மதிப்பூட்ட பொருட்களான பிஸ்கட், கட்லட், சூப் போன்ற பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கினார். முனைவர் ஜெயக்குமார் காளான் வித்துக்கள் உற்பத்தி மற்றும் காளான் படுக்கைகள் அமைக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கமளித்தார்.
மேலும், குடில்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலின் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கினார். இதில், வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

