/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணியர் நிழற்குடை மக்கள் எதிர்பார்ப்பு
/
பயணியர் நிழற்குடை மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 05, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும், விருத்தாசலம் - ஆலடி சாலையில் உள்ள பஸ் நிறுத்ததிற்கு சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்ததில் பயணியர் நிழற்குடை இல்லாததால், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச் செல்லும் அவல நிலை உள்ளது.
எனவே, பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.