ADDED : மார் 31, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; கீரப்பாளையம் அடுத்த கண்ணங்குடியில் சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் முரளி, சுந்தர், கிராம நிர்வாக அலுவலர் ஜேசு முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் கலைச்செல்வன், பாலாஜி, பேராசிரியர் அய்யப்பன் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர்.
பின், சங்க நிர்வாகிகள் 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்; மண் வளம் காப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

