ADDED : ஜூலை 04, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: ராஜஸ்தானில் இருந்து காரில் குட்கா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர்கள் பாரதநேரு, காந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், ஹான்ஸ் உட்பட குட்கா பொருட்களை மூன்று மூட்டைகளில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜஸ்தான் மாநிலம், வீரவா பகுதியை சேர்ந்த பெர்ரராம் மகன் ஹர்மிராம், 19; லட்சுமி நாராயணன் மகன் சாய்கிருஷ்ணா, 25; ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
