ADDED : டிச 20, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆற்று மணல் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற்று பகுதியில் நேற்று காலை ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணி செய்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில் கள்ளிப்பாடியைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன்,39; பூண்டியைச்சேர்ந்த குஞ்சிதம்,46; ஆகிய இருவரும் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடன போலீசார் இருவரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.