ADDED : செப் 18, 2025 03:59 AM
கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே வாலிபரை கொலை செய்ய முயன்ற இருவர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி அருகே இடங்கொண்டான்பட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார், 30; இவரை, முன்விரோதம் காரணமாக கிருஷ்ணமூர்த்தி, இளவரசன், திருநாவுக்கரசு ஆகியோர் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பாக குள்ளஞ்சாவடி போலிசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
இதில் கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு மீது ஏற்கனவே குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவர்களின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் , இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.