/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிகள் இருவர் கர்ப்பம் 2 வாலிபர்களுக்கு வலை
/
சிறுமிகள் இருவர் கர்ப்பம் 2 வாலிபர்களுக்கு வலை
ADDED : நவ 08, 2024 06:31 AM
கடலுார்: தனித்தனி சம்பவங்களில் 2 சிறுமிகள் கர்ப்பமான வழக்கில், இரு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார முதுநகர் அடுத்த வசந்தராயன்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் தினேஷ். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கடந்தாண்டு ஜூலையில் திருமணம் நடந்ததாக கடலுார் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இரு தரப்பினரிடம் நடத்திய விசாரணையில், திருமண வயது பூர்த்தியடையாமல் சிறுமியை திருமணம் செய்ததும், அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
மற்றொரு வழக்கு
கடலுார், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சோனம் மகன் பாபு, 22; இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து கடலுார் அனைத்து மகளிர் போலீசார் தனித்தனியே போக்சோ வழக்கு பதிந்து, தினேஷ் மற்றும் பாபுவை தேடி வருகின்றனர்.