UPDATED : மே 10, 2026 10:04 PM
ADDED : மே 10, 2026 10:01 PM
கடலுார்: முன் விரோத தகராறில் ஏற்பட்ட மோதலில், 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன்,55; இவருக்கும் திருப்பாதிரிப்புலியூர் கல்யாணசுந்தரம்,63; என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
இதற்கிடையே, வைத்தியநாதன், தனது மகள்கள் துர்கா, கீர்த்தனா ஆகியோரை பைக்கில் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கல்யாணசுந்தரம் மற்றும் , அவரது தரப்பினர் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு வைத்தியநாதன் தரப்பினரும் தாக்கினர்.
இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இருதரப்பிலும் சேர்ந்த கல்யாணசுந்தரம், வைத்தியநாதன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதில், வடிவேல், 51; சண்முகம்,58; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
