sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'லிப்ட்' கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

/

'லிப்ட்' கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

'லிப்ட்' கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

'லிப்ட்' கொடுத்து பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது


ADDED : ஏப் 28, 2025 06:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் பெண்ணாடத்தில் 'லிப்ட்' கொடுத்து கூலித்தொழிலாளியிடம் பணம், மொபைல் பறித்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் அடுத்த சத்தியவாடியை சேர்ந்தவர் பாண்டியன்,57; கூலித்தொழிலாளி.

இவர் திண்டுக்கல் மாவட்டம், அக்கரைப்பட்டியில் உள்ள கரும்பு ஆலையில் அச்சு வெல்லம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சொந்த ஊருக்கு வருவதற்காக, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, நேற்று மாலை 2:30 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையம் வந்தார். பின், அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இருவர் பாண்டியனிடம் நாங்கள் பெணணாடம் பஸ் நிலையம் செல்கிறோம் எனக்கூறி, 'லிப்ட்' கொடுத்து அவரை ஏற்றிக்கொண்டனர்.

ஆனால் பஸ் நிலையம் செல்லாமல், தெற்குரத வீதி பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி, 200 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், இருவரும் பெண்ணாடம் மேற்கு மெயின் ரோடு ரவிச்சந்திரன் மகன் சண்முகப்ரியன், 32, மேலபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், மொபைல், பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us