/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் தவறி விழுந்து இருவர் படுகாயம்
/
தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் தவறி விழுந்து இருவர் படுகாயம்
தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் தவறி விழுந்து இருவர் படுகாயம்
தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் தவறி விழுந்து இருவர் படுகாயம்
ADDED : செப் 21, 2024 06:21 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் தவறி விழுந்த இருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி கொளஞ்சியம்மாள். இவர்களது மகன் வடிவேல், மகள்கள் செல்வக்குமாரி, விஜயலட்சுமி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலியபெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில், இவரது 2 ஏக்கர் நிலத்தை மகன் வடிவேல் பராமரித்து வந்தார்.இதனால், வடிவேல், அவர்களது சகோதரிகள் செல்வக்குமாரி, விஜயலட்சுமி இடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்தது.
இந்நிலையில், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த நாயக்கன்பேட்டையை சேர்ந்த செல்வக்குமாரியின் கணவர் ரவிச்சந்திரன் நேற்று கோ.பொன்னேரிக்கு வந்தார்.
நேற்று மாலை 6:30 மணியளவில் வடிவேல், ரவிச்சந்திரன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகே இருந்த 30 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத தரைக்கிணற்றில் ரவிச்சந்திரன் தவறி விழுந்தார்.
உடன், விஜயலட்சுமியின் மகன் தமிழ்ச்செல்வன் அவரை காப்பாற்ற கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கினார். அப்போது அவரும் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்தார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி, இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து, விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.