ADDED : நவ 05, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் பிக்பாக்கெட் அடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 32; இவர், பண்ருட்டியில் பேக்கரியில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து 2,500 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு பயணியர் விடுதி அருகே நடந்து சென்றார்.
அப்போது தண்டுப்பாளையம் முத்துவேல் மகன் ராகுல், 19; அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் பிரதீப்குமார், 20; ஆகிய இருவரும் தினேஷ்குமாரிடம் இருந்த பணத்தை பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து ராகுல், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

