ADDED : ஜன 18, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆகாஷ், 21. இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் பைக்கில் தனது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த பரத்குமார் என்பவருடன் ஆதமங்கலத்தில் இருந்து வெண்கரும்பூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த மற்றும்மோர் பைக் மோதியது. அதில், ஆகாஷ், பரத்குமார் இருவரும் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த ஆவினங்குடி போலீசார் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக ஆகாஷ், சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரிக்கும், பரத்குமார், பெரம்பலுார் தனியார் மருத்துவக்கல்லுாரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.