sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலத்தில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை: பிரேமலதா பேட்டி

/

விருத்தாசலத்தில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை: பிரேமலதா பேட்டி

விருத்தாசலத்தில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை: பிரேமலதா பேட்டி

விருத்தாசலத்தில் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யவில்லை: பிரேமலதா பேட்டி


ADDED : ஆக 21, 2025 10:59 AM

Google News

ADDED : ஆக 21, 2025 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: ''வரும் 2026 சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை'' என தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் தே.மு.தி.க., சார்பில் நேற்று 'உள்ளம் தேடி இல்லம் நாடி' நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா பேசியதாவது:

திட்டக்குடி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் தொகுதிகள் விஜயகாந்தின் கோட்டை. வரும் 2026 சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியை மீண்டும் முரசு சின்னம் வென்று சரித்திரம் படைக்கும்.

வரும் 2026, ஜனவரியில் கடலுார் மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடக்க இருக்கிறது. விஜயகாந்த் ஜெயிச்ச முதல் தொகுதி விருத்தாசலம். அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி தொடரனும். திட்டக்குடி - விருத்தாசலம் தொகுதிக்கு இடையில் உள்ள பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

உலகமே திரும்பி பார்க்கும் மாநாடாக இருக்கும். 2011 வரலாற்று வெற்றியை மீண்டும் திரும்பப்பெறுவேம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அ வர் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பின், பிரேமலதா, அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்களுடன் கோலாட்டம் ஆடினார்.

பின்னர், பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

மதுரையில் நாளை (இன்று) நடக்கும் விஜய் கட்சி மாநாட்டில் விஜயகாந்த் போட்டோ வைத்தது பிரச்னை இல்லை. ஆனால் அக்கட்சி சார்பில் அரசியலில் எங்களுக்கு விஜயகாந்த் தான் மானசீக குரு என தெரிவிக்க வேண்டும். மாநாடு வெற்றி பெற தே.மு.தி.க., சார்பில் வாழ்த்துக்கள். விருத்தாசலம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.

திட்டக்குடி தொகுதியில் மாநாடு நடத்தி, போட்டியிடுவது குறித்து தெரிவிப்பேன். 234 தொகுதிகளும் எங்களுக்கு சாதகமாகத்தான் உள்ளது. துரோகிகள் காலம் முடித்துவிட்டது.

விசுவாசிகள் உடன் இருக்கிறார்கள். கூட்டணி அமைந்த பிறகு எதுவாக இருந்தாலும் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us