ADDED : ஜன 06, 2025 10:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் துறைமுகம் அருகே இறந்துகிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் துறைமுகம் காவல ்நிலைய எல்லைக்குட்பட்ட தைக்கால் தோணித்துறை மெயின்ரோடு அருகிலுள்ள சிறிய பாலத்தில் 70வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், கடந்த 2ம் தேதி காலை 6:00 மணியளவில் மயங்கி கிடந்தார்.
ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு,
இறந்தார். இறந்த நபர் யார், எந்த ஊர் என தெரியவில்லை. கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.