ADDED : ஜன 20, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; கிள்ளை முடசல் ஓடை மீன் பிடி இறங்கு தளத்தில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளம் வலை பின்னும் கூடம் அருகே 70 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. பச்சை நிற கட்டம் போட்ட சட்டை, கைலி அணிந்துள்ளார்.
கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, அவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

