/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் ஊழியர்களுக்கு சீருடை
/
பாடலீஸ்வரர் கோவிலில் ஊழியர்களுக்கு சீருடை
ADDED : ஜன 12, 2024 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செயல் அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் பாடலீஸ்வரர் கோவில், ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு வேட்டி, துண்டு மற்றும் ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்கினர்.
அப்போது அர்ச்சகர் நாகராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.