/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
/
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
சம்பளம் வழங்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 24, 2024 05:57 AM

புவனகிரி: மேல்புவனகிரி அருகே நுாறு நாள் வேலை செய்தவர்களுக்கு சம்பளம் வழங்க கோரி, கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேல்புவனகிரி ஒன்றியம், கிளாவடிநத்தம் கிராமத்தில், நுாறு வேலை திட்டத்தில், கடந்த வாரம் 6 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாளுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்கு ஊதியம் வழங்க கோரி, நேற்று புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புவனகிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. அதையடுத்து, துணை பி.டி.ஓ., சந்தோஷ்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார். அதன் பின் கலைந்து சென்றனர். இதனால் 1மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.