ADDED : மார் 01, 2026 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வேன் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய கடைகள் கட்டுமான இடத்தில் நேற்று காலை ஒருவர், 'ரெக்கவரி' வாகன்தின் பின்னால், சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து, அங்கிருந்தவர்கள் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் இறந்தவர் கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்த ரெக்கவரி வேன் டிரைவர் ராதாகிருஷ்ணணன்,60; என்பதும், தனது வாகனத்திலேயே துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது.
போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

