sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்

/

சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்

சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்

சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் தர்ணா போராட்டம்


ADDED : ஆக 13, 2025 03:22 AM

Google News

ADDED : ஆக 13, 2025 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுக்காவில் 200க் கும் மேற்பட்ட வி.ஏ. ஓ.,க் கள் உள்ளனர். நேற்று முன்தினம், சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், வி.ஏ.ஓ., க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், காலை முதல் மாலை 5:30 மணி வரை வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகத்தி ல் இருக்க வேண்டும். பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டிருந்து .

இதனை கண்டித்து தமிழ்நாடு'கிராம நிர்வாக அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, சப் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, '200க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் 'குவிந்தனர். நிர்வாகிகள் அலெக்சாண்டர், 'ஜான் போஸ்கோ, விஸ்வநாதன், கார்த்திகேயன், பக்ரிசாமி, ரவி, பாரதி தாசன் உட்பட 10 பேர், சப் கலெக்டர் கிஷன்குமார் அறைக்கு சென்றனர்.

உள்ளே செல்ல 6 பேருக்கு மட்டுமே அனுமதி எனக் கூறப்பட்டதால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., க்கள் அனைவரும் வெளியே வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ.,க்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உள்ளே அழைத்தனர். சப் கலெக்டர் அழைத்தால்தான் உள்ளே வருவோம் எனக் கூறினர்.

இதனால், சப் கலெக்டர் தனது உதவியாளர் மூலமாக வி.ஏ.ஓ.,க்களுக்கு அழைப்பு விடுத்தார். பின், கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளித்து விட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us