ADDED : செப் 07, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் வ.உ.சி., தெருவில் வ.உ.சி.,யின் 155வது பிறந்த நாள் விழா நடந்தது.
தமிழ்நாடு வ.உ.சி. நல பேரவை சார்பில் நடந்த விழாவில், வ.உ.சிதம்பரம் பிள்ளை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ரகுபதி, விசவ ஹிந்து பர்ஷித் மாவட்ட பொறுப்பாளர் ஜோதி குருவாயூரப்பன், சிதம்பரம் நகர வ.உ.சி. நலப்பேரவை தலைவர் ஆதித்தன், தி.மு.க., கவுன்சிலர் குமார், அ.தி.மு.க., பொறுப்பாளர் சுவாமிநாதன், மணி, சிவக்குமார், ரவி, தமிழரசன், குணசேகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
