/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கட்சி நிர்வாகி கொலை; நெய்வேலி அருகே பதற்றம்
/
வி.சி., கட்சி நிர்வாகி கொலை; நெய்வேலி அருகே பதற்றம்
வி.சி., கட்சி நிர்வாகி கொலை; நெய்வேலி அருகே பதற்றம்
வி.சி., கட்சி நிர்வாகி கொலை; நெய்வேலி அருகே பதற்றம்
ADDED : ஜன 21, 2025 07:35 AM

நெய்வேலி; கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கொள்ளிருப்பு ஊராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனி மகன் பாலாஜி,30; திருமணமாகவில்லை. வி.சி., கட்சியின் மாவட்ட மாணவரணி பொருளாளர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கு மகன் திருநாவுக்கரசு,28.கொள்ளிருப்பு காலனியில் ஏலச்சீட்டு கேட்பதில், பாலாஜி, திருநாவுக்கரசு இடையே நேற்றிரவு 8:00 மணிக்கு தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.
ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியின் நெஞ்சில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். வி.சி., கட்சி நிர்வாகி கொலை சம்பவத்தால் கொள்ளிருப்பு ஊராட்சியில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

