sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து

/

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து


ADDED : ஜன 22, 2025 09:25 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் அரசு கால்நடை மருத்துவமனை மருந்தகம் உள்ளது.

ஒரத்துார் சுற்றியுள்ள கிளியனுார், பரதுார், சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம், பழைய ஒரத்துார் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்நடை மருத்துவமனை பழுதடைந்து விரிசல்களும், சிமென்ட் காரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகின்றன. கட்டட மேல்கூரையில் தேங்கும் மழைநீர் கட்டடத்திற்குள் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சொட்டி வருவதால் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இருப்பு வைக்கப்படும் மருந்துகள் நனைந்து வீணாகின்றன. சுற்றுபுற கிராமங்களுக்கு ஒரே கால்நடை மருத்துவமனை உள்ள நிலையில் கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us