sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

/

நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : டிச 16, 2024 07:07 AM

Google News

ADDED : டிச 16, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் கன மழை, வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எள்ளேரி பகுதி மக்கள் தங்களுக்கு முறையான நிவாரணம் வழங்கவில்லை எனக் கோரி நேற்று மாலை 6:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதனால் சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.

அதையடுத்து அனைவரும் மாலை 6:30 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us