sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

/

இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 14, 2025 04:48 AM

Google News

ADDED : பிப் 14, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: இலவச மனைபட்டா கேட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் காந்தி நகரில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல், இந்து - ஆதியன், இந்து மலை குறவர் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் இலவச மனைபட்டா கேட்டு, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை.

இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., கட்சி கிளை செயலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

பொன்னுசாமி, மாரி, சின்னதம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் துரை கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட நிர்வாக குழு சுப்ரமணியன், முருகையன், ஒன்றிய செயலர்கள் நிதி உலகநாதன், கோவிந்தராசு, வட்ட செயலர் பாலமுருகன், ஒன்றிய துணை செயலர் தேவா, மாவட்ட குழு அம்பிகா, நகர செயலர் செல்வராசு, பெரியசாமி மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதன்பின், கோரிக்கை மனுவை தனி தாசில்தார் வெற்றிவேலிடம் வழங்கினர்.

மனுவை பெற்றுக்கொண்ட தனி தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us