sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் குவாரிக்கு எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

/

மணல் குவாரிக்கு எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

மணல் குவாரிக்கு எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்

மணல் குவாரிக்கு எதிர்ப்பு கிராம மக்கள் போராட்டம்


ADDED : மே 02, 2025 05:24 AM

Google News

ADDED : மே 02, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் அருகே தனியார் சவுடு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் கிராமத்தில், தனியார் சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு, விதிமுறைகளை மீறி அதிகளவு மணல் எடுக்கப்படுவதாக கூறி, கிராம மக்கள் மணல் குவாரியை மூட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், சவுடு மணல் குவாரி கடந்த ஒரு மாதமாக இயங்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் சவுடு மணல் குவாரி இயங்கியதாக தகவல் கிடைத்த நிலையில், அப்பகுதி மக்கள் 70க்கும் மேற்பட்டோர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதனால், குவாரியில் இருந்து லாரியில் மணல் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டது. மாலை ௬.௩௦ மணிக்கு கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us