sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

/

பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

பட்டா கேட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 07, 2025 05:09 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் கிராம மக்கள் இலவச மனைபட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த டி.வி., புத்துாரில் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்குவதாக வருவாய்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால், இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகலறிந்து வந்த தாசில்தார் உதயகுமார், அதிகாரி களிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us