/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்
/
4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்
4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்
4 வழிச்சாலையில் மேம்பாலம் கோரி கடலுார் அருகே கிராம மக்கள் மறியல்
ADDED : செப் 22, 2024 02:21 AM

கடலுார்: விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையிலான 4 வழிச்சாலையில், ராமாபுரம் அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி கிராம மக்கள்நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை, கடலுார் அருகே ராமாபுரம் வழியாக சென்று சிதம்பரம் சாலையில் இணைகிறது. கிழக்கு ராமாபுரத்திற்கும்,வழிசோதனை பாளையத்திற்கும் இடையே இச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு செல்ல வசதியாக, நான்கு வழிச்சாலையில் ராமாபுரம்- வழிசோதனை பாளையம் கிராமத்திற்கு இடையே, சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மேம்பாலம் அமைக்கப்படாமல் சாலை பணி நடந்து வந்தது. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணியளவில் விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடலுார் தாசில்தார் பலராமன், திருப்பாதிரிப்புலியூர் போலிசார் விசாரணை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கலந்து பேசி ஆவண செய்வதாக உறுதியளித்ததன்பேரில் 11:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.