sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி

/

வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி

வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி

வெயிலின் தாக்கத்தால் வறண்டு கட்டாந்தரையான வீராணம் ஏரி


ADDED : மார் 01, 2024 12:58 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டத்தின் காவிரி கடைமடை டெல்டா பகுதியில் 50,000 ஏக்கர் பாசனத்திற்கும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாகவும் வீராணம் ஏரி உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கொள்ளிடம் ஆற்றில் கீழணையில் தேக்கப்பட்டு, அங்கிருந்த வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தடைகிறது. மொத்தம் 1.46 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தேக்கப்படும் தண்ணீர் வாயிலாக டெல்டாவில் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவில் இல்லாததால், வீராணத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

கடந்த ஜனவரி முதல் வாரத்திலிருந்தே ஏரியில் படிப்படியாக நீர்மட்டம் குறைந்து வந்தது. கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் முற்றிலும் வறண்டு கட்டாந்தரையாக மாறியுள்ளது. அதனால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.

தற்போது ஏரி வறண்டுள்ள நிலையில், சுற்றுப்புற பகுதி இளைஞர்கள் ஏரியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி, கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us