நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் கன்னித் திருவிழா நடந்தது.
விவசாயம் தழைக்கவும், இளம்பெண்கள், இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டியும், ஆண்டுதோறும் புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் கன்னித் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 16 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
சிறப்பு விழாவான கன்னித் திருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று காலை 7.00 மணிக்கு சப்த கன்னிகளுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கரகம், அக்னி சட்டி, சாட்டைக்காரன், சப்த கன்னிகள் பம்பை, உடுக்கையுடன் ஆடிப்பாடி சென்று, அப்பகுதியில் உள்ள குளத்தில் கன்னித் திருவிழா நடந்தது.

